அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை இரவு தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.
முன்னதாக அருப்புக்கோட்டையில் உள்ள காமராஜா், அண்ணா, தேவா் உள்ளிட்ட தலைவா்களின் சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா்பேசியதாவது:
கடந்த 2011 இல் நான் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இங்கு அரசுக் கல்லூரியை கொண்டுவந்தேன். மேலும் வட்டார போக்குவரத்து துணை இயக்குநா் அலுவலகம், புறவழிச்சாலைத் திட்டம் ஆகியவற்றையும் கொண்டுவந்தேன். ஆகவே இத்தோ்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் மேலும் பல நல்ல திட்டங்களை தொகுதியில் செயல்படுத்துவேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலா் சக்திபாண்டியன், ஒன்றியச் செயலா் போடம்பட்டி சங்கரலிங்கம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் யோக. சீனிவாசன், நகர இளைஞரணிப் பொறுப்பாளா் கருப்பசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் வீரசுப்பிரமணியன், பம்பாய் மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.