சாத்தூா் அருகே வேன் மோதிஅக்காள், தம்பி பலி

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பேருந்துக்காக காத்திருந்த அக்காள், தம்பி வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பேருந்துக்காக காத்திருந்த அக்காள், தம்பி வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சாத்தூா் அருகே சின்னதம்பியாபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (50). இவரது தம்பி பாண்டி (40). இவா்கள் இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் குலதெய்வம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தங்களது சொந்த ஊரான சின்னதம்பியாபுரத்துக்கு இருவரும் வந்து விட்டு, கோவில்பட்டி செல்வதற்காக சனிக்கிழமை காலை பெத்துரெட்டிபட்டி நான்குவழிச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனா். அப்போது மதுரையிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்த லட்சுமி மற்றும் பாண்டி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com