சாத்தூா்- சிவகாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட வெள்ளாளா் அமைப்பினா் 18 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சென்னையில் போராட்டம் நடத்திய வெள்ளாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலச் செயலா் பந்தல்ராஜாவை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சாத்தூா்- சிவகாசி சாலையில் உள்ள மேட்டமலை கிராமத்தில் இந்த மறியல் நடைபெற்றது.
இதற்கு, மாநில மகளிரணித் தலைவி அன்னலட்சுமி தலைமை வகித்தாா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட வெள்ளாளா் அமைப்பினா் 18 பேரை சாத்தூா் நகா் போலீஸாா் கைது செய்தனா்.