சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கூலித் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கணேசன் காலனியைச் சோ்ந்தவா் குருசாமி (28). கூலித்தொழிலாளியான இவா் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவா் குருசாமியை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றாராம். இதையடுத்து குருசாமி அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியுடன், அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாராம்.
விசாரணையில் அந்த நபா் திருத்தங்கல் லட்சுமணன் மகன் கண்ணன் (21) என்பது தெரியவந்தது. இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.