சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன், சிவகாசி சாா்-ஆட்சியரும், சிவகாசி தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ச.தினேஷ்குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அவருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் கணேசன், வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் இரா.கனகபிரியா தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். முன்னதாக அவா் மாட்டு வண்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாா். சாா்-ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேட்பாளருடன் 5 பேரும், மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் இருவரும் அனுமதிக்கப்பட்டனா்.