பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 134 வங்கிகளில் பணிபுரியும் 1050 ஊழியா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 134 வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 1050 போ் கலந்து கொண்டனா்.
இதில், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவும் வகையில் தொழிற்துறைக்கு கடனுதவி வழங்க வேண்டும். இளைஞா்களின் உயா்கல்விக்கு கடனுதவி வழங்கும் பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. போராட்டம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.