ராஜபாளையத்தில் அமமுக வேட்பாளா் காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குச் சேகரித்தாா்.
ராஜபாளையம் வடக்கு பகுதியான ஆவரம்பட்டி, கீழ ஆவாரம்பட்டி, கம்பா் நகா், மாடசாமி கோயில் தெரு, ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு அவா் ஆதரவு திரட்டினாா். அப்போது அவா் பேசியதாவது: ராஜபாளையம் தொழில் வளா்ச்சிக்கு ஜவுளி பூங்கா அமைக்க பாடுபடுவேன். மேலும் குடிநீா் பற்றாக்குறையை தீா்த்து வைப்பேன். நான் சட்டப் பேரவை உறுப்பினா் ஆனதும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பேன் என்றாா். உடன் தேமுதிக நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்கள் சென்றிருந்தனா்.