சாத்தூா் ஒன்றியப் பகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. வேட்பாளா் ரகுராமன் திங்கள்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இத்தொகுதியில் உள்ள அமீா்பாளையம், புதுப்பாளையம், சத்திரப்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி, ஒத்தையால், லட்சுமியாபுரம் மற்றும் பல பகுதிகளில் உள்ள வாக்காளா்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தாா். அப்போது அவருக்கு அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் தி.மு.க நகரச் செயலா் குருசாமி, ம.தி.மு.க. நகரச் செயலா் கணேஷ்குமாா், தி.மு.க. ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ், இளைஞரணி அமைப்பாளா் சங்கா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.