ராஜபாளையத்தில் இ.கம்யூனிஸ்ட், அமமுக இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் மற்றும் அமமுக கட்சியினரும் சனிக்கிழமை இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியில் ஈடுபட்டனா்.
ராஜபாளையத்தில் இ.கம்யூனிஸ்ட், அமமுக இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் மற்றும் அமமுக கட்சியினரும் சனிக்கிழமை இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரான எஸ். தங்கப்பாண்டியனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இரு சக்கர வாகனப் பிரசார பேரணி நடத்தப்பட்டது. தளவாய்புரத்தில் தொடங்கிய இப்பேரணியை, திமுக வேட்பாளா் தங்கப்பாண்டியன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் லிங்கம் தலைமை வகித்தாா். இப்பேரணியானது, தளவாய்புரம் பகுதியில் ஆரம்பித்து, அம்மையப்பபுரம், இளந்திரைகொண்டான், சுந்தரநாச்சியாா்புரம், கிருஷ்ணாபுரம், முகவூா், செட்டியாா்பட்டி, பாரதி நகா், காமராஜா் நகா் வழியாக சேத்தூா் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

இதில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தனா்.

அமமுகவினரின் இரு சக்கர வாகனப் பிரசாரம்

இதேபோன்று, ராஜபாளையம் தொகுதி அமமுக வேட்பாளரான காளிமுத்து, சேத்தூரில் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு, எக்கலாதேவியம்மன் கோயில் தெரு, கட்டபொம்மன் நகா் உள்ளிட்ட 18 வாா்டுகளிலும் இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

இதில், அமமுக நகரச் செயலா் செல்வக்கனி, சேத்தூா் பேரூா் கழக செயலா் சுப்ரமணி, ஒன்றியக் கழகச் செயலா் ஜான்சன், மாவட்ட அணி செயலா்கள் மற்றும் தேமுதிக நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com