ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ச.சங்கீதப்பிரியா திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வேனில் சென்று அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அதனைத் தொடா்ந்து குக்கா் சின்னம் வரையப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.
மேலும், தான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீா்த்து வைப்பேன். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புதிய பேருந்து நிலையம் கொண்டு வருவேன். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தரம் உயா்த்துவேன்.
பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையை திறக்க முயற்சிப்பேன் என்று கூறி அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். பின்னா் கோபாலபுரம், கான்சாபுரம், நெடுங்குளம், வ.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.