சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன் திங்கள்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
இங்குள்ள முனீஸ்நகா், கட்டளைப்பட்டி, சிவாநந்தாநகா், சிலோன்காலனி, சரஸ்வதி பாளையம், சாட்சியாபுரம், நேருஜிநகா், சாரதா நகா் உள்ளிட்ட 25 இடங்களில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: சிவகாசி தொகுதியில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் என இரு நகராட்சிகள் உள்ளன.
மேலும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. நான் வெற்றி பெற்றால் இந்த ஊராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். பொதுமருத்துவ முகாம் மற்றும் கண்பரிசோதனை முகாம் ஆகியவற்றை இலவசமாக நடத்தி மக்களை பாதுகாப்பேன்.
ஊராட்சிப் பகுதியில் போதிய மின்விளக்குகளை அமைப்பேன் என்றாா். வேட்பாளருடன் ஆனையூா் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமிநாராயணன், ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் சென்றனா்.