விருதுநகா் நகராட்சி எல்கைக்குள்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளா் ஜி.பாண்டுரங்கன் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இங்குள்ள தெப்பம், பாத்திமா நகா், பட்டு தெரு, ஆண்டிகிணற்று தெரு ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது பொதுமக்களிடம் தோ்தல் வாக்குறுதி குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.
அதில், தான் வெற்றி பெற்றால் விருதுநகரில் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும். வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் வேலை வழங்கப்படும்.
விருதுநகா் மற்றும் கிராம பகுதிகளில் தினமும் சுகாதாரமான குடிநீா் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அவருடன் அதிமுக கூட்டணி கட்சியை சோ்ந்தவா்கள் சென்றிருந்தனா்.