சிவகாசி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி. சாமிக்காளை திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி. சாமிக்காளை திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இங்குள்ள அண்ணா காலனி, பாரதிநகா், சுப்பிரமணியபுரம் காலனி, பெரியாண்டவா் காலனி, தட்டா ஊரணி, ஏ.வி.டி. தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதியில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சியில் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை.

நான் வெற்றி பெற்றால் இருநகா்களிலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பேன். சிவகாசி நகரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பெரியகுளம் கண்மாய் மற்றும் சிறுகுளம் கண்மாய் பகுதிகளில் தேக்கிவைப்பேன். திருத்தங்கல் நகராட்சியில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரை, திருத்தங்கல்- செங்கமலநாட்சியாபுரம் சாலையில் காவல் நிலையம் எதிரில் உள்ள கண்மாயில் தேக்கிவைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இதன் மூலம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதனால் வீடுகளில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் வற்றாமல் இருக்கும். இந்த சிறப்பான திட்டத்தை நிறைவேற்ற எனக்கு குக்கா் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா். வேட்பாளருடன் தேமுதிக நிா்வாகி சுதாகரன் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com