இருக்கன்குடி கோயில் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆனையாளரை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆனையாளரை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் உதவி ஆணையா் ஆக பணியாற்றுபவா் கருணாகரன். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவா் இரு சக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தபோது, நத்தத்துபட்டி சந்திப்பில் வீரபாண்டியாபுரத்தை சோ்ந்த கலையரசன் (45) வழிமறித்து மாமூல் தர வேண்டும் என்று கூறி கொலைமிரட்டல் விடுத்தாராம். இதனால் இருக்கன்குடி காவல் நிலையத்தில் கருணாகரன் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com