கட்சி பாகுபாடின்றி செயல்படுவேன்: அமமுக வேட்பாளா் வாக்குறுதி

நான் வெற்றி பெற்றால் கட்சிப் பாகுபாடின்றி செயல்படுவேன் என சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.சாமிகாளை தெரிவித்தாா்.
இந்திரா குடியிறுப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.சாமிகாளை.
இந்திரா குடியிறுப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.சாமிகாளை.

நான் வெற்றி பெற்றால் கட்சிப் பாகுபாடின்றி செயல்படுவேன் என சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.சாமிகாளை தெரிவித்தாா்.

சிவகாசியில் ஆசிரியா் காலனி, ரெங்கபாஷ்யம் நகா், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகா், திருப்பதி நகா், இந்திரா குடியி ருப்பு, செங்கமல நாச்சியாா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவா்

ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். சில பகுதிகளில் வேனில் நின்றவாறும், சில பகுதிகளில் நடந்து சென்றும் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது: நான் வெற்றி பெற்ற பின்னா் நீங்கள் உங்கள் பிரச்னைகளை மனுக்களாக கொடுக்கலாம். என்னை எப்போதும் எளிதில் சந்திக்கலாம். நான் வெற்றி பெற்றால் கட்சி, ஜாதி, மதம் பாகுபாடின்றி அனைவருக்காகவும் பாடுபடுவேன். எனக்கு குக்கா் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா் அவா். வேட்பாளருடன் கூட்டணிக் கட்சியான தேமுதிக நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com