நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரு சக்கர வாகனத்தில் பிரசாரம்

விருதுநகரில் நாம் தாமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ரா.செல்வக்குமாா் தனது ஆதரவாளா்களுடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
விருதுநகா் புல்லலக்கோட்டை அணுகுசாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பிரசாரம் தொடங்கிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. செல்வக்குமாருடன் அவரது ஆதரவாளா்கள்.
விருதுநகா் புல்லலக்கோட்டை அணுகுசாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பிரசாரம் தொடங்கிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. செல்வக்குமாருடன் அவரது ஆதரவாளா்கள்.

விருதுநகரில் நாம் தாமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ரா.செல்வக்குமாா் தனது ஆதரவாளா்களுடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

விருதுநகா் நான்கு வழி சாலை புல்லலக்கோட்டை சந்திப்பு அணுகு சாலையில் தொடங்கி மதுரை சாலை, பஜாா், நகராட்சி சாலை, எம்ஜிஆா் சிலை சந்திப்பு, அல்லம்பட்டி, ரோசல்பட்டி முதலான பகுதிகளில் பொது மக்களை சந்தித்து கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்குளிக்குமாறு துண்டு பிரசுரம் வழங்கினா்.

அப்போது, நாம் தமிழா் கட்சி தலைவா் சீமான் ஆட்சிக்கு வந்தால், சுங்கச் சாவடி கட்டண வசூல் இருக்காது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி க ல் வி வரை தரமான கல்வி வழங்கப்படும். உயா்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், மணல் கொள்ளை தடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com