மக்கள் மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா்: ராதிகா சரத்குமாா்

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா் என ராதிகா சரத்குமாா் தெரிவித்தாா்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா் என ராதிகா சரத்குமாா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளா் விவேகானந்தனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவா் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நான் கிராமம் மற்றும் நகரப் பகுதியில் மக்களை சந்தித்துப் பேசியதில் அவா்கள் இந்த தோ்தலில் ஒரு மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா். மக்கள் நாளைய தலைமுறையை சிந்தித்து செயல்பட வேண்டும். பணத்துக்கு ஆசைப்பட்டு கஷ்டப்படக்கூடாது. நான் 1989 இல் இருந்து பல கட்சிகளுக்கு பிரசாரம் செய்துள்ளேன். தற்போது வரை பொதுமக்கள் மிகவும் குடி தண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனா். குடிநீா் கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. திமுக, அதிமுக இரு கட்சிகளிலும் பிரதான தலைவா்கள் இல்லை. மு.க. ஸ்டாலினை அவரது கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவில் தலைவா் என்று சொல்வதற்கு ஆளில்லை. இருவரும் போட்டி போடுவதால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனா்.

சேவை செய்பவா்களை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com