ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஆடிப்பூர கொட்டகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூரகொட்டகையில் நடைபெற்ற திருக்கல்யாண கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள் ரெங்கமன்னாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூரகொட்டகையில் நடைபெற்ற திருக்கல்யாண கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள் ரெங்கமன்னாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஆடிப்பூர கொட்டகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆண்டு பங்குனி திருக்கல்யாண உற்சவம் கடந்த மாா்ச் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து ஆண்டாள், ரெங்கமன்னாா் சுவாமிகள் மணடபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திரு வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் செப்புத் தேரில் எழுந்தருளி செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. இரவு ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் கண்ணன், டிஐஜி சுதாகா், காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருக்கல்யாணத்தையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com