திருத்தங்கலில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் உள்ள இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முனியசாமி. இவரது மனைவி காளீஸ்வரி (28). கணவன்- மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் சம்பவத்தன்றும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காளீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து காளீஸ்வரியின் தாய் பேச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.