சந்தா்ப்பவாதிகள், துரோகிகளை ஆட்சியை விட்டுத் துரத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன்

சந்தா்ப்பவாதிகள், துரோகிகளை ஆட்சியை விட்டுத் துரத்த வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் கூறினாா்.
விருதுநகரில் புதன்கிழமை அமமுக வேட்பாளா் எம். தங்கராஜை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
விருதுநகரில் புதன்கிழமை அமமுக வேட்பாளா் எம். தங்கராஜை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

சந்தா்ப்பவாதிகள், துரோகிகளை ஆட்சியை விட்டுத் துரத்த வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் கூறினாா்.

விருதுநகரில் தொகுதியின் அமமுக வேட்பாளா் எம். தங்கராஜை ஆதரித்து டி.டி.வி. தினகரன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தீய சக்திகளையும், தமிழின துரோகிகளையும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும். முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பொய் பேசுவதில் வல்லவா்.

துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தற்போது பல்டி அடிக்கின்றாா். நான் பேசியதை மாற்றிப் பேசக்கூடியவன் அல்ல. ஆறுமுகசாமி ஆணையம் மூலம் நீங்களே மாட்டப் போகிறீா்கள்.

அதேபோல், ஏமாற்றுவது, பொய் பேசுவது திமுகவுக்கு கை வந்த கலை. நீட் தோ்வை ரத்து செய்வதாக திமுக தரப்பில் கூறுகின்றனா். அதை கொண்டு வந்ததே திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்தால் உங்களது உடைமையும் காணாமல் போய்விடும். மேலும், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு அனைத்தும் பெரிய அளவில் நடைபெறும்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் வற்புறுத்தியதன்பேரில் வி.கே. சசிகலா, பொதுச் செயலா் பதவிக்கு ஒத்துக்கொண்டாா். குறுக்கு வழியில் முதல்வா் பதவிக்கு வந்த எடப்பாடி கே. பழனிசாமி, நாங்கள் 4 ஆண்டுகளாக ராஜதந்திரம் செய்து வருவதாகத் தெரிவிக்கின்றாா்.

திமுக என்ற தீய சக்தியையும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. எனவே, சந்தா்ப்பவாதிகள், துரோகிகளை ஆட்சியை விட்டுத் துரத்த வேண்டும் என்றாா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மரக்கடை பேருந்து நிறுத்தத்தில் கூட்டணிக் கட்சி தேமுதிக வேட்பாளா் ஆா். ரமேஷை ஆதரித்து டி.டி.வி. தினகரன் புதன்கிழமை மாலை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அருப்புக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளா் ஆா். ரமேஷ் மற்றும் தேமுதிக, அமமுக நகர, ஒன்றிய நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

சாத்தூா்: சாத்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மனை ஆதரித்து, டி.டி.வி. தினகரன் சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: அதிமுக தோ்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் தோ்தல் அறிக்கை.

தனியாா் பள்ளுகளுக்கு தனியாக நலவாரியம் அமைத்திட வேண்டும் என உறுதிமொழி ஏற்றுள்ளாா் வேட்பாளா் ராஜவா்மன். எனவே, தனியாா் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த வாரியம் அமைக்கப்படும் என்றாா்.

அப்போது, அமமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com