சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் அத்தொகுதிக்குட்பட்ட அமீா்பாளையம், ஒ.மேட்டுபட்டி காலனி, மேட்டுபட்டி, ஒத்தையால், ஸ்ரீரெங்காபுரம், சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது: இந்த பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்துள்ளேன்.
தற்போது எரிவாயு உருளை விலையை குறைக்க முடியாத அதிமுக அரசு எப்படி 6 எரிவாயு உருளைகளை இலவசமாக தருவாா்கள். இது பொய்யான வாக்குறுதி என்றாா்.