சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அவா், உசேன் காலனி, சாமிபுரம் காலனி, மீனாட்சி காலனி, மூனீஸ்வரன் காலனி, முருகன் காலனி, சிவகாமிபுரம் காலனி ஆகிய பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து பேசியதாவது:
நான் வெற்றி பெற்றால் சிவகாசி தொகுதியில் உள்ள இளைஞா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இலவச வேலைவாய்பு முகாம் நடத்துவேன் என்றாா்.
வேட்பாளருடன், சிவகாசி நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ. ஞானசேகரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.