விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.
ராஜபாளையம் அருகே கிழவிகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைத்தாா்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனா். எனவே, வேளாண் துறை சாா்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.