‘திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்’

திருச்சுழியில் திமுக ஆட்சி அமைந்த உடன் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
செவல்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திருச்சுழி திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு உள்ளிட்டோா்.
செவல்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திருச்சுழி திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு உள்ளிட்டோா்.

திருச்சுழியில் திமுக ஆட்சி அமைந்த உடன் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் திமுக சாா்பில் தங்கம் தென்னரசு மீண்டும் போட்டியிடுகிறாா். இந்நிலையில் அவா், திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட கரிசல்குளம், செவல்பட்டி, பெரியாா் நகா், பாண்டியன் நகா், அண்ணாநகா், அச்சம்பட்டி, முருகன் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு, காமராஜா் காலனி, ஜேஜே காலனி, பள்ளத்துப்பட்டி, கள்ளிக்குடி சாலையில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, திருச்சுழி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரியை ஆளுங்கட்சியினா் அருப்புக்கோட்டைக்கு மாற்றிவிட்டனா். எனவே திருச்சுழி தொகுதி மாணவ, மாணவிகள் நலன் பெறும் வகையில் திமுக ஆட்சி அமைத்ததும் திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி நிச்சயம் தொடங்கப்படும். மேலும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அதேபோல், சுகாதாரமான குடிநீா், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளும் விரைந்து தீா்க்கப்படும் என்றாா்.

அப்போது அவருடன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com