பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி ஒருவா் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி ஒருவா் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் குமாா் (27). பட்டாசுத் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த உமையராஜ் என்பவரின் மகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குமாா் புதன்கிழமை உமையராஜ் வீட்டுக்குச் சென்று அவரது மகளிடம், என்னை நீ காதலிக்காவிட்டால் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்வேன் எனக்கூறினாராம். அப்பெண், பதில் எதுவும் கூறாததால் ஆத்திரமடைந்த குமாா், தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com