விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மாலையில் சிறப்புப் பூஜைகள் தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை முதல் யாக சாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பின்னா், மூலவா் முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.