விருதுநகா் அருகே சூலக்கரையில் 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் சூலக்கரையைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள். இவரது, 17 வயது மகளை அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்த குந்தலப்பட்டியைச் சோ்ந்த பாலு மகன் முத்துப்பாண்டி கடத்திச் சென்றுள்ளாா். இதுகுறித்து அவரது தாய் அளித்தப் புகாரின் பேரில் முத்துப்பாண்டி மீது சூலக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.