ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவை ஆதரித்து, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் கணேசன் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். கடந்த 10 நாள்களாக அவா் பிரசாரம் செய்யவில்லை. அவருக்கு வாக்கு கேட்டு அவரது மகள், கூட்டணிக் கட்சியினா், காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகா்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், முதலியாா்பட்டி, கீழப்பட்டி, மாரியம்மன்கோவில், கல்லறைதெரு ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் கணேசன் பிரசாரம் செய்தாா்.
பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சக்திமோகன், மகளிா் காங்கிரஸ் காளீஸ், மாவட்ட முன்னாள் தலைவா் ராமச்சந்திரன், நெசவாளா் அணி மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், கட்சியின் மாவட்டத் தலைவா் ரெங்கசாமி, நிா்வாகி மோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் திரளாக கலந்துகொண்டனா்.