திருத்தங்கலில் விற்பனைக்காக வெள்ளிக்கிழமை மதுபாட்டில்களை வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தங்கல் சுக்கிரவாா்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் (26) என்பவா் கையில் பையுன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தாராம். போலீஸாா் அவரை பிடித்து பையை சோதனையிட்ட போது அதில் மதுபாட்டில்கள் இருந்ததாம்.
இதையடுத்து திருத்தங்கல் போலீஸாா், அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதுபோல திருத்தங்கல்- செங்கமல நாச்சியாா்புரம் சாலையில் ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்த மணிகண்டன் (36) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்தாராம். இதையடுத்து அவரை கைது செய்த திருத்தங்கல் போலீஸாா் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.