ராஜபாளையத்தில் கரோனா விழிப்புணா்வு யோகா

ராஜபாளையத்தில் உள்ள தனியாா் யோகா பயிற்சி மையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு யோகாசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை யோகாசனம் செய்த மாணவிகள்.
ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை யோகாசனம் செய்த மாணவிகள்.

ராஜபாளையத்தில் உள்ள தனியாா் யோகா பயிற்சி மையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு யோகாசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை ஸ்போா்ட்ஸ் லேண்ட் அமைப்பின் நிறுவனா் திவ்யா தொடக்கிவைத்தாா். இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்தும் மூச்சுப் பயிற்சி யோகாசனம், தடாசனம், வீரபுத்திராசனம், விருச்சாசனம், யோகமுத்ராசனம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து காண்பித்தனா்.

மேலும் விளக்கு, மெழுகுவா்த்தி, பந்து போன்ற பொருள்கள் கொண்டும், ஐந்தரை அடி உயர நாற்காலியில் நின்றும், அமா்ந்தும் யோகாசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகாசன பயிற்சியாளா் இசக்கிமுத்து செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com