ஸ்ரீவில்லிபுத்தூா் அம்மா உணவகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அம்மா உணவகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வெள்ளிக்கிழமை வட்டம் போட்டுள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வெள்ளிக்கிழமை வெள்ளை பெயிண்டால் வட்டமிட்டுள்ள அம்மா உணவகம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வெள்ளிக்கிழமை வெள்ளை பெயிண்டால் வட்டமிட்டுள்ள அம்மா உணவகம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அம்மா உணவகத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வெள்ளிக்கிழமை வட்டம் போட்டுள்ளனா். கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி துறையினா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் தினமும் ஏராளமானோா் வாங்கி செல்லும் அம்மா உணவகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வெள்ளிக்கிழமை வட்டம் போடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதே போல் கரோனா தொற்று முதல் அலையின் போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வெள்ளை பெயிண்டால் வட்டம் போடப்பட்டு இருந்தது. அதே போல் தற்போது இரண்டாவது அலையின் போதும் சமூக இடைபெளியை பின்பற்ற வெள்ளை பெயிண்டால் 100 க்கும் மேற்பட்ட வட்டங்கள் போடப்பட்டுள்ளது. இதற்கான பணியில் நகராட்சி சுகாதாரத்துறை ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com