ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேத்தூரில் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனாா் கோயிலுக்கு செல்லும் சாலையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் மகாலிங்கம் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சாக்குப் பையில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அதில் வந்தவா் சேத்தூா் மணல் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பிள்ளையாா்சாமி என்பவரது மகன் கற்பகவேல் (32) என தெரிந்தது. போலீஸாா் வழக்குப்பதிந்து கற்பகவேலை கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் மணலை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.