ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் கழிவுப் பஞ்சு ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கொத்தங்குளத்தில் உள்ள இந்த ஆலையில் சனிக்கிழமை மாலை குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுப் பஞ்சுகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியா்கள் தீயை அணைக்க முயன்றனா். மேலும், இது தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரி அந்தோணிக்கும் தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதனிடையே மின்னல் தாக்கியதில் மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தெரிவித்தனா். ஆனாலும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே சேத மதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும் என அவா்கள் கூறினா்.