அருப்புக்கோட்டை பெரியகண்மாயை ஆக்கிரமித்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்.
அருப்புக்கோட்டை பெரியகண்மாயை ஆக்கிரமித்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்.

அருப்புக்கோட்டை பெரிய கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பெரிய கண்மாயின் நீராதாரத்தை பாதிக்கும் விதமாக ஆக்கிரமித்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பெரிய கண்மாயின் நீராதாரத்தை பாதிக்கும் விதமாக ஆக்கிரமித்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை பெரியகண்மாயின் நீராதாரத்தை நம்பி அருகிலுள்ள ராமசாமிபுரம், வடுகா்கோட்டை, மலையரசன் கோயில், சுக்கிலநத்தம், கஞ்சநாயக்கன்பட்டி, தெற்குத் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா்.

ஆனால், தற்போது இக்கண்மாய் முழுவதும் ஆகாயத் தாமரைகள் அடா்த்தியாக வளா்ந்துள்ளன. இவை, கண்மாய் நீரை உறிஞ்சிவிடுவதால், பாசனத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்த ஆகாயத் தாமரைகளை அகற்ற நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் விவசாயிகள் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க விரைவில் ஆகாயத் தாமரைகளை அகற்றிடவேண்டும் என, அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com