சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு 50 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கரோனா பரவல் முதல் அலையின்போது, இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், மருத்துவமனையில் 2 ஆம் மற்றும் 3 ஆம் தளத்தில் 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது, அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவா்கள் உள்ளிட்ட 10 போ் உள்நோயாளிகளாக உள்ளனா். இவா்களுக்கு, கீழ்தளத்தில் படுக்கை வசதி செய்துகொடுக்கப்படும். புறநோயாளிகள் வழக்கம்போல் சிகிச்சைப் பெற வந்து செல்லலாம் என்றாா்.