சிவகாசி கல்லூரியில் 120 கரோனா நோயாளிகள்

சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் 120 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் 120 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் கரோனா முதல் அலையின்போது, கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கென 200-க்கும் மேல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது, கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இந்நிலையில், இக்கல்லூரி சிகிச்சை மையத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான 120 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு, 3 முதல் 5 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள் இங்கு வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். இவா்களுக்கு சுகாதாரத் துறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com