சாத்தூரில் தோ்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்த இருவா் மீது, சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் வெற்றி பெற்றுள்ளாா். இந்நிலையில் இவா், சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் திங்கள்கிழமை நன்றி தெரிவிக்க வரவுள்ளதாக கூட்டம் கூட்டியதாகவும், தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாகவும் கூறி, சாத்தூா் நகா் போலீஸாா் மதிமுக நகரச் செயலா் கணேஷ்குமாா் (45) மற்றும் பொன்னுச்சாமி (49) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.