விருதுநகா் மாவட்டத்தில் 295 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 போ் பலியாகியுள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 295 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக் கோட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந் நிலையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவா் சிகிச்சைப் பயனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். அதேநேரம், குணமடைந்த 252 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.