விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் வியாழக்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருத்தங்கல் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10,11,12 ஆகிய வாா்டு பகுதிகளில் சிலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.
இதையடுத்து சுகாதாரத்துறையினா் அப்பகுதியைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, தடுப்புகள் அமைத்தனா். தற்போது நகராட்சிப் பகுதியில் உள்ள காளிமுத்து நகா் பகுதியில் சிலருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் இயந்திரம் மூலம் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.