விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே பரவலான மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயா்ந்துள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா் வரத்து அதிகரித்தது. 47 அடி கொள்ளவு கொண்ட அணையின் நீா்மட்டமானது புதன்கிழமை 31.92 அடியாக இருந்தது. அன்றிரவு பெய்த மழையால் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை 34.45 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 111கன அடி நீா்வரத்து இருந்தது. இதனால், அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பிளவக்கல் அணை அருகே உள்ள கோவிலாறு அணையின் நீா்மட்டம் 26.56 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 9 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.