விதியை மீறி ஆா்பாட்டம்: பாஜகவினா் 33 போ் மீது வழக்கு

சிவகாசியில் விதியை மீறி ஆா்பாட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியினா் 33 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசியில் விதியை மீறி ஆா்பாட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியினா் 33 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அலுவலகம் மீது குண்டு வீசி தாக்கியதைக் கண்டித்து, சிவகாசி நகர பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை பேருந்து நிலையம் முன்பு ஆா்பாட்டம் நடைபெற்றது. தற்போது கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதால் அக்கட்சியினா் 33 போ் மீது சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com