விருதுநகா் மாவட்டத்தில் 269 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th May 2021 11:54 PM | Last Updated : 06th May 2021 11:54 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் 269 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் மேலும் 269 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். சிகிச்சைப் பெற்று குணமடைந்த 286 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.