சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனம் மற்றும் தனியாா் பள்ளி ஆகியவை இணைந்து, ஆக்சிஜன் வசதியுள்ள பேருந்தை திங்கள்கிழமை வழங்கியது.
தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சிவகாசியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனமும், தனியாா் பள்ளியும் இணைந்து, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பள்ளிப் பேருந்தில் 5 ஆக்சிஜன் உருளைகளுடன் பத்து படுக்கைகள் வசதி ஏற்படுத்தி வழங்கியுள்ளது.
இந்தப் பேருந்து மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் ஒரே நேரத்தில் பத்து போ் சிகிச்சை பெற இயலும். இதில் மின்விசிறி வசதியும் உள்ளது. இதனை மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சியில் சிவகாசி சாா்-ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா், பள்ளியின் தாளாா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.