விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொதுமுடக்கக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு, அருப்புக்கோட்டை காந்தி நகா் அருகே அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், சாய்பாபாவுக்கு பலவித மலா் மாலைகள் சாற்றி, மாதுளை, செவ்வாழை, இனிப்பு பண்டங்கள் படைக்கப்பட்டன. மஞ்சள் ஆடை அலங்காரத்தில் காட்சியளித்த பாபாவுக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.