ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் வீராச்சாமி, துணைச் செயலாளா் கணேசமூா்த்தி, வழக்குரைஞா் பகத்சிங், ராஜகுரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.