ஆடையில் தீப்பற்றி மூதாட்டி பலி

விருதுநகரில் ஆடையில் தீப்பற்றி உடல்கருகி மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் அல்லம்பட்டி பழனிசாமி காம்பவுண்ட் 

விருதுநகரில் ஆடையில் தீப்பற்றி உடல்கருகி மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் அல்லம்பட்டி பழனிசாமி காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் மேரி (70). உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் கட்டிலின் அடியில் கொசுவா்த்தி சுருளை பற்ற வைத்து விட்டு படுத்திருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக கொசுவா்த்தியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவரது சேலையில் பற்றி தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து விருதுநகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com