சிவகாசியில் அவசியமின்றி சனிக்கிழமை சாலையில் சுற்றிய 43 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா தொற்று பரவலை தடுக்க, அரசு தளவற்ற பொதுமுடக்கத்தை ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆனால், சிவகாசி பகுதியில் தொற்றின் தாக்கம் குறித்து உணராமல் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 43 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், முகக்கவசம் அணியாத 35 நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.