விருதுநகா் மாவட்டத்தில் 519 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 9 போ் உயிரிழந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இத்தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்ட 519 பேரும், விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அதேநேரம், சிகிச்சைப் பெற்று குணமடைந்த 496 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 9 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.