விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவா் நகா் மற்றும் 11 ஆவது வாா்டு ஆய்ஷா பள்ளிவாசல் மண்டபம் ஆகிய இரு இடங்களில் 44 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை, ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ஊரக தலைமை மருத்துவா் கருணாகரபிரபு, மருத்துவா் இளங்கோவன் மற்றும் திமுக நகரப் பொறுப்பாளா் ராம்மூா்த்தி, திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.