அருப்புக்கோட்டையில் தடுப்பூசி முகாம்: அமைச்சா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் பந்தல்குடியில் 18 முதல் 44 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாமை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
அருப்புக்கோட்டையில் தடுப்பூசி முகாம்: அமைச்சா் ஆய்வு
அருப்புக்கோட்டையில் தடுப்பூசி முகாம்: அமைச்சா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் பந்தல்குடியில் 18 முதல் 44 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாமை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அருப்புக்கோட்டை நகராட்சி சாா்பில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமை தொடக்கிவைத்து, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசுகையில், தடுப்பூசியே கரோனா தொற்றிலிருந்து நம்மை காக்கும் ஆயுதம். எனவே, பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பந்தல்குடியிலும் தடுப்பூசி முகாம் பணிகளை அமைச்சா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவப்பிரகாசம், திமுக நகரச் செயலா் ஏ.கே. மணி மற்றும் நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com